ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

முல்லைத்திணை


451.
கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்
தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி 
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே.

452.
வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்
கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றே
பகைவெங் காதலர் திறைதரு முயற்சி
மெல்தோள் ஆய்கவின் மறையப் 
பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே.

453.
அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண்
கார்தொடங் கின்றால் காலை அதனால்
நீர்தொடங் கினவால் நெடுங்கணவர்
தேர்தொடங் கின்றால் நம்வயி நானே.

454.
தளவின் பைங்கொடி தழீஇப் பையென
நிலவின் அன்ன நேரும்பு பேணிக்
கார்நய்ந்து எய்தும் முல்லை அவர்
தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே.

455.
அரசுபகை தணிய முரசுபடச் சினை இ
ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே
அளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்து
மின்னிழை ஞெகிழச் சாஅய்த் 
தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே.

456.
உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்
பகல்மதி உருவைல் பகன்றை மாமலர்
வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும்
அரும்பனி அளை இய கூதிர்
ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே.

457.
பெய்பன் நலிய உய்தல்செல் லாது
குருகினம் நரலும் பிரிவருங் காலைத் 
த்ஹுறந்தமை கல்லார் காதலர்
மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே.

458.
துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்
அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென
மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே.

459.
மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்
புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்
அரண்க டந்த சீர்கெழு தானை
வெல்போர் வேந்தனொடு சென்றா
நல்வய லூரன் நறுந்தண் மார்பே.

460.
பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்
இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா
ததை இலை வாழை முழுமுதல் அசைய
இன்னா வாடையும் அலைக்கும்
என்ஆகு வன்கொல் அளியென் யானே.