ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

முல்லைத்திணை


441.
ஐய ஆயின செய்யோள் களவி
கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென
நோய் நன்கு செய்தன் எமக்கே
யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே.

442.
பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ
இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து 
அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணிப்பூண் புதல்வன் கற்பின்

443.
நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று 
இலங்கு நிலவின் இளம்பிறை போலக்
காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுயர் அரண்பல வெளவிய
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.

444.
பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து 
வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை
வென்வேல் வேந்தன் பகைதணிந்து
இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

445.
புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்
துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர்
நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
உள்லூதொறும் கலிழும் நெஞ்சம் 
வல்லே எம்மையும் வரவிழைந் தனையே.

446.
முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை அருந்தொழில் உதவிநம்
காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே.

447.
பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே
பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
யாடு சிறைவண்டு அழிப்பப்
பாடல் சான்ற காண்கம்வாள் நுதலே.

448.
தழங்குரல் முரசம் காலை இயம்பக்
கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந் தனனே.
மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்குபெயல் கனைதுளி கார் எதிர்ந் தன்றே
அஞ்சில் ஓதியை உள்லுதொறும்
துஞ்சாது அலமரல் நாமெதிர்ந் தனமே.

449.
முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு
பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
ஒள்நுதல் காண்குவம் வேந்துவினை முடினே.

450.
முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து 
நாடுமுன் னியரோ பீடுகெழ வேந்தன்
வெய்ய உயிர்க்கு நோய்தணியச்
செய்யோள் இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே.