குறுந்தொகை

குறுந்தொகை

குறுந்தொகை


101. குறிஞ்சி - தலைவன் கூற்று 

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் 
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் 
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே 
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி 
மாண்வரி அல்குற் குறுமகள் 
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
-பரூஉ மோவாய்ப் பதுமனார்.

102. குறிஞ்சி - தலைவன் கூற்று

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
-பரூஉ மோவாய்ப் பதுமனார்

103. நெய்தல் - தலைவி கூற்று 

உள்ளின் உள்ளம் வேமே உள்ளா 
திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி 
வான்றோய் வற்றே காமம் 
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே. 
-ஔவையார்.

104. நெய்தல் - தலைவி கூற்று 

கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல் 
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய் 
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத் 
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும் 
வாரார் போல்வர்நங் காதலர் 
வாழேன் போல்வல் தோழி யானே. 
-வாயிலான் தேவனார்.

105. பாலை - தலைவி கூற்று 

அம்ம வாழி தோழி காதலர் 
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத் 
தாளித் தண்பவர் நாளா மேயும் 
பனிபடு நாளே பிரிந்தனர் 
பிரியும் நாளும் பலவா குபவே. 
-காவன் முல்லைப்பூதனார்.

106. குறிஞ்சி - தலைவி கூற்று 

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் 
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் 
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் 
சூர்மலை நாடன் கேண்மை 
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.
-நக்கீரர்.

107. குறிஞ்சி - தலைவி கூற்று 

புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர் 
வரையிழி அருவியின் தோன்றும் நாடன் 
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் 
வந்தன்று வாழி தோழி நாமும் 
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு 
தான்மணந் தனையமென விடுகந் தூதே. 
-கபிலர்.

108. மருதம் - தலைவி கூற்று 

குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன 
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் 
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் 
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் 
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் 
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த 
ஏம இன்துயில் எடுப்பி யோயே. 
-மதுரைக் கண்ணனார்.

109. முல்லை - தலைவி கூற்று 

மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் 
கறவை கன்றுவயிற் படரப் புறவிற் 
பாசிலை முல்லை ஆசில் வான்பூச் 
செவ்வான் செவ்வி கொண்டன்று 
உய்யேன் போல்வல் தோழி யானே. 
-வாயிலான் தேவனார்.

110. நெய்தல் - தோழி கூற்று 

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை 
புணரி இகுதிரை தரூஉந் துறைவன் 
புணரிய இருந்த ஞான்றும் 
இன்னது மன்னோ நன்னுதற் கவினே. 
-நம்பி குட்டுவனார்.

111. முல்லை - தலைவி கூற்று 

வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு 
யாரா கியரோ தோழி நீர 
நீலப் பைம்போ துளரிப் புதல 
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி 
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த 
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று 
இன்னா தெறிதரும் வாடையொடு 
என்னா யினள்கொல் என்னா தோரே. 
-கிள்ளிமங்கலங்கிழார்.

112. குறிஞ்சி - தோழி கூற்று 

மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் 
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் 
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் 
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன 
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் 
வல்லே வருக தோழிநம் 
இல்லோர் பெருநகை காணிய சிறிதே. 
-தீன்மதி நாகனார்.

113. குறிஞ்சி - தலைவி கூற்று 

கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும் 
எள்ளற விடினே உள்ளது நாணே 
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ 
நாருடை ஒசியல் அற்றே 
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. 
-ஆலத்தூர் கிழார்.

114. மருதம் - தோழி கூற்று 

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் 
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே 
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும் 
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம் 
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும் 
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே. 
-மாதீர்த்தனார்.

115. நெய்தல் - தோழி கூற்று 

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி 
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க 
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும் 
ஆரல் அருந்த வயிற்ற 
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே. 
-பொன்னாகனார்.

116. குறிஞ்சி - தோழி கூற்று 

பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே 
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு 
புலவி தீர அளிமதி இலைகவர் 
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல் 
மென்னடை மரையா துஞ்சும் 
நன்மலை நாட நின்னல திலளே. 
-கபிலர்.

117. குறிஞ்சி - தலைவன் கூற்று 

யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல் 
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை 
நுண்மணல் அறல்வார்ந் தன்ன 
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே. 
-இளங்கீரனார்.

118. நெய்தல் - தோழி கூற்று 

மாரி ஆம்ப லன்ன கொக்கின் 
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு 
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர் 
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன் 
வாரா தமையினும் அமைக 
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே. 
-குன்றியனார்.

119. நெய்தல் - தலைவி கூற்று 

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய 
நள்ளென வந்த நாரில் மாலைப் 
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் 
வருவீர் உளீரோ எனவும் 
வாரார் தோழிநங் கா த லோரே. 
-நன்னாகையார்.

120. குறிஞ்சி - தலைவன் கூற்று 

சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை 
கான யானை அணங்கி யாஅங்கு 
இளையள் முளைவாள் எயிற்றள் 
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே. 
-சத்திநாதனார்.

121. குறிஞ்சி - தலைவன் கூற்று 

இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு 
அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி 
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு 
அரியள் ஆகுதல் அறியா தோயே. 
-பரணர்.

122. குறிஞ்சி - தலைவி கூற்று 

மெய்யே வாழி தோழி சாரல் 
மைபட் டன்ன மாமுக முசுக்கலை 
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற 
கோட்டொடு போகி யாங்கு நாடன் 
தான்குறி வாயாத் தப்பற்குத் 
தாம்பசந் தனஎன் தடமென் தோளே. 
-கபிலர்.

123. நெய்தல் - தலைவி கூற்று 

பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன 
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே 
வந்தன்று வாழியோ மாலை 
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. 
-ஓரம் போகியார்.

124. நெய்தல் - தோழி கூற்று 

இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் 
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக் 
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப 
இன்னும் வாரார் வரூஉம் 
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே. 
-ஐயூர் முடவனார்.

125. பாலை - தோழி கூற்று 

உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை 
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு 
இன்னா என்றி ராயின் 
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.