தொல்காப்பியம்

தொல்காப்பியம்

முதல் பாடல்


வட வேங்கடம் தென் குமரி 
ஆயிடைத் 
தமிழ் கூறும் நல் உலகத்து 
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் 
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு 
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் 
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல் 
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து 
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய    
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து 
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி 
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த 
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் 
பல் புகழ் நிறுத்த படிமையோனே.           15